Monday, 22 June 2020

முதிர்வு கால பயணம்

முதிர்வு கால பயணம்
 யாரும் எதிர்பார்த்திடாத முதிர்வு கால பயணம் உங்களையும் அறியாது நாமும் நமது குழந்தைகளும் சென்று கொண்டு இருக்கிறோம். யோசிக்க முடியாத கோணம். 10 வயதினை கடந்த குழந்தைகள் பலர் இடம் ஆய்த்திலும் மறந்து போன மருத்துவம் என்ற நூலில் கருந்துருக்களை ஆய்து பார்த்ததில் கண்டறிந்த அதிசயம்.

  வயதுகளை தாண்டிய உடல் முதிர்ச்சி, ஆண் பெண் என்ற பாகுபாடு இன்றி இன்றைய பொழுது போக்கு அம்சங்கள் நமக்கு அளித்துள்ள நஞ்சு , பிஞ்சுகளை வெதும்ப செநய்திடும் நஞ்சு.

 தொலைக்காட்சி பெட்டி பற்றிதான் குறிப்பிடுகின்றேன்.   தொலைகாட்சியில் தொலைந்து போகும் குழந்தைகளை சற்று கவனியுங்கள் தெரியும்  ஆம்  'பொழுது போக்கு ' என்ற தமிழ் சொல் கூட அதைத்தான் குறிப்பிடுகின்றது காலங்களை விரைவாக செல்லச்செய்வது. ஆம் தொலைகாட்சி, மற்றும் செல்லிட பேசிகளில் தொலைந்து போகும் குழந்தைகளின் உடல்கள் விரைவாக வளர்கின்றன, முக அமைப்பு முதல் சிந்தனை வரை எல்லாம் வயதினை தாண்டி வளர்ச்சி

 ஆறாவது படிக்கும் பிள்ளைகள் எட்டாவது அல்லது பத்தாம் வகுப்பு படிக்கும் பிள்ளைகள் போன்றும் எட்டாவது பிள்ளைகள் பத்தாம் வகுப்பு பிள்ளைகள் போலவும்  உருவ அமைப்பில் மாறுபடுவதை காணலாம். ஏன் பெண் பிள்ளைகளில் பூப்பெய்தும் வயது கூட குறைவது கண்டு வருத்தப்பட்டது உண்டு, சிறு வயதிலேயே பூப்பெய்தும் பெண்பிள்ளைகள் அதிகம்.

 மறந்து போன மருத்துவம் என்ற நாலில் ஆசிரியர் சொல்லுவார் தொலைகாட்சி பார்க்கும் பெரியவர்களுக்கும் விரைவிலேயே முட்டு வழி எற்படும் என்று, ஆம்  80 அல்லது 90 வயதுளிலும் வந்திடா மூட்டு வழி இன்று முப்பது வயதினை கடக்கும் போதே வருகிறது. இதற்க்கு காரணம் என்ன?  என்பதை தெளிவாக விளக்கி இருப்பார்

 எழுத்துக்கள் மனிதனை சிந்திக்க வைத்தாலும் காட்சிகள் மனிதனை வாழவைக்கின்றன ஆம் காட்சியாக ஒரு கதைப்பார்த்தாலும் அது கதை கருத்தின் கால அளவு உடல் உறுப்புகளை  முதிர்ச்சி அடைய செய்கின்றது.  அதனால் தான் இத்தனை மாற்றமும், உணவும் அவசர உணவு, உடையும் உடல் ஓட்டியவை. காணும் காட்சிகளும் கால முதிர்ச்சியை தருபவை
 இவை யாவும் நம்மை அறியாது நம்மை எதிர்கால பயணித்தில் நம்மை பறக்க செய்கின்ற...

 நாம் யாவரும் நம்மை காட்டிலும் 10 முதல் 20 வது வயது வரை உடலாலும் உணர்வாலும் முதிர்ச்சி அடைந்து உள்ளோம் .  என்றும் இளமையாய் பலநூறு ஆண்டுகள் வழந்த சித்தர்கள் பூமியில்  இளமையிலேயே முதுமை அடைந்து வாழ்கிறோம். இதை உணர்வார் உண்டோ

No comments:

Post a Comment